தக்காளி, புதினா சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • உப்பு  தேவையான அளவு.

அரைக்க:

  • புதினா  ஒரு கைப்பிடி,
  • மல்லித்தழை  ஒரு கைப்பிடி,
  • பச்சை மிளகாய்  4,
  • இஞ்சி  ஒரு துண்டு, பூண்டு  4 பல்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்.

தனியே அரைக்க:

  • தக்காளி  3.

தாளிக்க:

  • எண்ணெய்  2 டீஸ்பூன்,
  • நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • பட்டை  ஒரு துண்டு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினாமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள். வாசமும் நிறமும் சாப்பிட அழைக்கும்.

குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.