பனீர் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  ஒரு கப்,
  • மைதா மாவு  ஒரு கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் விழுது  கால் டீஸ்பூன்,
  • மல்லித்தழை (பொடியாக நறுக்கியது)  2 டீஸ்பூன்,
  • பனீர்  சில துண்டுகள்,
  • எண்ணெய் அல்லது நெய்  ஒரு டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  கால் டீஸ்பூன்,
  • அம்சூர்தூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பனீரை மசித்து, சீரகம், உப்பு, மல்லித்தழை, மிளகாய் விழுது, கரம்மசாலா, அம்சூர்தூள் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வழக்கம் போல, செப்பு செய்து, பனீர் பூரணத்தை உள்ளே வைத்து மூடி, மீண்டும் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.