பருப்பு கத்திரிக்காய்

தேவையானவை:

  • பிஞ்சு கத்திரிக்காய்  கால் கிலோ,
  • துவரம்பருப்பு  அரை கப்,
  • மிளகாய் வற்றல்  4,
  • உப்பு  தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிதளவு,
  • எண்ணெய்  அரை கப்.

செய்முறை: இதுவும் ஒருவிதமான எண்ணெய் கத்திரிக்காய்தான். துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கத்திரிக்காய் ஒன்றை நான்காக வகிர்ந்து (பிளந்து) கொள்ளவும். காயை 1015 நிமிடங்கள் அரிசி கழுவிய நீரில் ஊற விடவும். கத்திரிக்காயை வெளியே எடுத்து அரைத்த மசாலாவைக் காயினுள் திணிக்கவும். சட்டியில் தாளித்து போட்டு மசாலா திணித்த கத்திரிக்காயைச் சேர்த்து குறைந்த தீயில் வதக்கி இறக்கவும். குறிப்பு: காயை ஆவியில் கொஞ்ச நேரம் வேக வைத்தும் வதக்கலாம். இவ்விதம் செய்தால் சீக்கிரம் வதங்கி விடும். எண்ணெய் குறைவாகச் செலவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X