...

மரக்கறி தோசை குழம்பு

தேவையானவை:

தோசைக்கு : கடலைப்பருப்பு – கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சரிசி – கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் – 3, நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: பெரிய வெங்காயம் – 2, நன்கு பழுத்த தக்காளி – 3, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா சிறிதளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

செய்முறை: முதலில் மரக்கறி தோசைக்கான அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, மிளகாய், சோம்பு சேர்த்து சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயம். மல்லித்தழை, தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை சிறு சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவையுங்கள்.

குழம்புக்கு : வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை சிவந்ததும் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். அத்துடன், தக்காளி, தேவையான உப்பு, மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்தபின், கறிவேப்பிலை, மல்லித்தழை சேருங்கள்.

பரிமாறுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக, சுட்டுவைத்திருக்கும் மரக்கறி தோசைகளை குழம்பில் சேர்த்து, 5 நிமிடம் கழித்து பரிமாறுங்கள். தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள பிரமாதமான சைட் டிஷ் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.