மிக்ஸ்டு கோகநட் பூரி

தேவையானவை:

  • மைதா  2 கப்,
  • தேங்காய் துருவல்  கால் கப்,
  • டூட்டிஃப்ரூட்டி  ஒரு டேபிஸ்பூன்,
  • பொடித்த சர்க்கரை  5 டேபிஸ்பூன்,
  • ஏலக்காய்தூள்  ஒரு சிட்டிகை,
  • எண்ணெய் அல்லது நெய்  ஒரு டீஸ்பூன்,
  • உப்பு  ஒரு சிட்டிகை,
  • சோம்பு (பொடித்தது)  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் துளி உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும். டூட்டிஃப்ரூட்டியைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் சர்க்கரை தூள், ஏலக்காய்தூள், சோம்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வெஜிடபிள் பூரிக்கு சொன்னது போலவே, மைதா மாவு உருண்டைகளுக்குள் தேங்காய் பூரணம் வைத்து பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். மணமும் சுவையும் பிரமாதப்படுத்தும்.