முளைப்பயறு பூரி

தேவையானவை:

  • மைதா மாவு  ஒரு கப்,
  • கோதுமை மாவு  ஒரு கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • பாசிப்பயறு  அரை கப்,
  • இஞ்சிபச்சை மிளகாய் விழுது  அரை டீஸ்பூன்,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் கட்டிவைக்கவும். மறுநாள் நன்கு முளைவிட்டுவிடும். முளைகட்டிய பயறை சீரகம் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்த பயறு, இஞ்சிபச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவையும் மைதா மாவையும் உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். அதை செப்புகளாகச் செய்து, நடுவே முளைப்பயறுப் பூரணத்தை வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். (குறிப்பு: பயணங்களுக்கு இதை எடுத்துச் செல்வதென்றால், பயறுக் கலவையை நன்கு வதக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X