கடலைமாவு இட்லி

தேவையானவை:

நன்கு புளித்த இட்லி மாவு – 2 கப்,
கடலைமாவு – முக்கால் கப்,
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

மேலே தூவ: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, தேங்காய் துருவல் – இவற்றுள் ஏதாவது ஒன்று.

செய்முறை: இட்லி மாவுடன், கடலைமாவு, ஆப்பசோடா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து மாவில் கலந்து, இட்லிகளாக ஊற்றியெடுங்கள். சூடாக இருக்கும் போதே, விருப்பப்பட்ட துருவலை மேலே தூவிப் பரிமாறுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *