...

சாம்பார் இட்லி

தேவையானவை:
இட்லி மாவு – 2 கப்,
மசூர் பருப்பு – அரை கப்,
பரங்கிக்காய் – சிறிய துண்டு.
சின்ன வெங்காயம் – 12,
தக்காளி – 3,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – கால் டீஸ்பூன்,
புளி – சிறிய உருண்டை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மல்லித் தழை – சிறிதளவு,
நெய் – 2 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 6,
தனியா – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
கொப்பரை – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாவைக் கொண்டு சிறு, சிறு, இட்லிகளாக ஊற்றி யெடுங்கள். பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, பருப்பை குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து கரையும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, மல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.