தேவையானவை:
பச்சரிசி 1 கப், புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு அரை கப், வடித்த பச்சரிசி சாதம் 1 கைப்பிடி, உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து (3 மணி நேரம்), சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, பொங்கிய பின் (10 மணி நேரம் கழித்து) மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதற்கு காரச் சட்னி மிகவும் சுவை கொடுக்கும். சென்னை போன்ற நகர்களில், ‘செட்தோசை வடகறி’ என்பது டிபன்களில் மிகவும் பிரபலமான ஜோடி.