முள்ளுமுருங்கை இலை தோசை

தேவையானவை:

  • பச்சரிசி   1 கப்,
  • முள்ளுமுருங்கை இலை   6,
  • பச்சை மிளகாய்   2,
  • மிளகு   10,
  • சீரகம்   அரை டீஸ்பூன்,
  • உப்பு   தேவைக்கேற்ப,
  • எண்ணெய் + நெய்   தேவையான அளவு,
  • சின்ன வெங்காயம்   10.

செய்முறை: அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும். பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும். பின் மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரி எண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். பூண்டு புதினா தோசை

தேவையானவை:

  • ஆலு தோசை மாவு   2 கப்,
  • பூண்டு   20 பற்கள்,
  • புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது)   2 டேபிள்ஸ்பூன்,
  • சீரகம்   அரை டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்   1,
  • எண்ணெய்   தேவைக்கேற்ப.

செய்முறை: பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும். மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும். ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6 லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம். எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.