தேவையானவை: நடுத்தர அளவு வள்ளிக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, சாம்பார்பொடி – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு: எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு. டீஸ்பூன், சீரகம் – கால்
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் + தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சதுரத் துண்டுகளாக (பட்டாணி அளவு) நறுக்கி அலசி எடுக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த பருப்புடன் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து காயை வேகவிடவும். கிழங்கு வெந்ததும் உப்பு சேர்த்து கலக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து அதில் ஊற்றி கலக்கி துருவிய தேங்காயையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.