தேங்காய்ப்பொடி

தேவையானவை:

  • தேங்காய்  ஒரு மூடி,
  • உளுத்தம்பருப்பு  கால் கப்,
  • காய்ந்த மிளகாய்  5,
  • பெருங்காயம்  பட்டாணி அளவு,
  • நல்லெண்ணெய்  முக்கால் டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மீதி எண்ணெயில் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, மிளகாயையும், பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் முதலில் மிளகாயையும், உப்பையும் போட்டு அரைத்துக்கொள்ளவும். வறுத்த தேங்காய்த்துருவல், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு நறநறப்பாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய்ப்பொடியை நாள்பட உபயோகிக்கக் கூடாது. சிக்கு வாடை வரும். எனவே, தேவையான அளவு கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *