தேவையானவை:
- துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,
- புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- கொத்துமல்லி, கறிவேப்பிலை சிறிது,
- தக்காளி 1, எண்ணெய் கால் டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு:
- துவரம்பருப்பு 2 டீஸ்பூன்,
- தனியா 4 டீஸ்பூன்,
- மிளகு ஒன்றரை டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 4.
செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை வறுக்காமல் மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். புளியை இரண்டு கப் நீர் ஊற்றி கரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து தக்காளியை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கி, புளிக்கரைசலை அதில் விடவும். பெருங்காயத்தூளைப் போட்டு உப்பையும் போடவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே அதில் போடவும். சிறிது கொதிக்க ஆரம்பித்ததும் ரசப்பொடியை போட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கி விடவும். இதுதான் திடீர் ரசம். அருமையாக இருக்கும்.