நார்த்தங்காய் ரசம்

தேவையானவை:

  • துவரம்பருப்பு  கால் கப்,
  • தக்காளி  1,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • நார்த்தங்காய் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்.

ரசப்பொடிக்கு:

  • தனியா  3 டீஸ்பூன்,
  • துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  4.

தாளிக்க: எண்ணெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: பொடிக்க வேண்டியவற்றை வறுக்காமல் பொடித்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து, உப்பையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து கொதி வந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். கடைசியாக நார்த்தங்காய் சாற்றை ஊற்றி கலக்கி வைக்கவும்.