பருப்பு ரசம்

தேவையானவை:

  • துவரம்பருப்பு  கால் கப்,
  • தக்காளி  1, உப்பு  
  • ஒரு டீஸ்பூன்,
  • புளி  நெல்லிக்காய் அளவு,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • பூண்டு  3 பல்.

ரசப்பொடிக்கு:

  • துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • தனியா  3 டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  3.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி  சிறிது.

செய்முறை: ரசப்பொடிக்கான பொருட்களை பச்சையாக, சற்று கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் புளியை ஒன்றரை கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை நன்றாகக் கரைத்துவிட்டு, புளித்தண்ணீரையும் உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு பூண்டை எண்ணெயில் லேசாக வதக்கி அதையும் தட்டிப் போடவும். சிறிது கொதித்ததும் ரசப்பொடி போட்டு, ஒரு கொதி வந்ததும் பருப்புடன் தேவையான தண்ணீரையும் சேர்க்கவும். நுரையுடன் பொங்கி வரும்போது இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிக்கவும்.