பீஸ் மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன்.

பூரணத்துக்கு: பட்டாணி & ஒரு கப், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் & 2, மாங்காய் தூள் & ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் & ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை&புதினா & சிறிதளவு, உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவை உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். பட்டாணியை வேகவைத்து, நீரை வடித்துவிட்டு மசித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டாணி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி இறக்குங்கள். பூரணம் ரெடி. இனி, வழக்கம்போல கோதுமை மாவினுள் இந்தப் பூரணத்தை ஸ்டஃப் செய்து, சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக் கல்லில் போட்டு வேகவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X