முழுப்பயறு தால்

தேவையானவை:

  • பாசிப்பயறு  அரை கப்,
  • கடலைப்பருப்பு  அரை கப்,
  • பழுத்த தக்காளி  4,
  • பெரிய வெங்காயம்  4,
  • இஞ்சி  ஒரு துண்டு,
  • மல்லித்தழை  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மிளகாய்தூள்  ஒன்றரை டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  அரை டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  அரை டீஸ்பூன்,
  • தனியாதூள்  அரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • சர்க்கரை  ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப.

செய்முறை: தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், இஞ்சி, மல்லித்தழை மூன்றையும் பொடியாக நறுக்கவும். பருப்பையும் பயறையும் குக்கரில் குழைய வேகவிட்டு (6 விசில் வைக்கவும்) ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி போட்டு 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். இப்பொழுது வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். எல்லா தூள்களையும் போட்டு சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறவும். 5லிருந்து 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். நடுவில் கிளறிவிடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி பூரி, சப்பாத்தியுடனோ, சூடான சாதத்துடனோ சேர்த்து சாப்பிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *